இளம் குற்றவாளிகள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன!

பிணை அனுமதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மாலை கைது செய்யப்படட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ராஜித சேனாரத்னவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டது.

எதிர்வரும் 27ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்து கொரோனா சூழ்நிலையை கருதி சற்றுமுன் நீர்கொழும்பு – பல்லன்சேன, தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்தில் ராஜித சேனாரத்ன அடைக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!