விருப்பு வாக்கு விபரங்கள் இப்போது இல்லை!

பொதுத்தேர்தல் திகதியை அறிவித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களை வெளியிடுவதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே, அந்த நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த பின்னரே, விருப்பு வாக்கு இலக்கங்களை விநியோகிப்பது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!