யாழ். பல்கலைக்கழகம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நேற்று இரவு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக, மாணவர்கள், சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு விரைந்து சென்ற பொலிசார், நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பெயர், விபரங்கள் பதிவு செய்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!