மின் துண்டிப்பால் 45 ஆயிரம் பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை அடுத்து பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக சுமார் 45,000 பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலேயே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது