சம்பந்தனை சந்தித்து பேசுவோம்!

முக்கிய பதவியிலிருந்து கொண்டு சுமந்திரன் விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என சொல்வதை அவரது தனிப்பட்ட கருத்து என ஏற்கமுடியாது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களுடைய மக்களின் விடுதலைதான் எமது பிரதான நோக்கம் அதற்காகதான் ஆயுதம் ஏந்தினோம் அது புனிதமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தமிழ்தேசிய கூட்டைமைப்பு என்ற அடிப்படையில் சுமந்திரன் தொடர்பான கருத்துக்களை நான் இதுவரைக்கும் குறிப்பிடவில்லை .

முக்கிய பதவியிலிருந்து கொண்டு சுமந்திரன் விடுதலைப்போராட்டத்தை ஏற்கவில்லை என சுமந்திரன் சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என ஏற்கமுடியாது.

ஆயுதபோராட்டம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் அனைவரினதும் கருத்தும் ஒன்றாகயிருக்க வேண்டும்,இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து உரையாடவுள்ளோம்.

சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்களை மாற்றிச் சொல்லியதாக கூறுவது எங்களை மலினப்படுத்துவது போல உள்ளது எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!