90 வீதம் கட்டுக்குள் வந்து விட்டது கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல், 90 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். வேறெங்கும் கொரோனா தொற்று இல்லை.

கூட்டாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் நாட்டில் வைரசை கட்டுப்படுத்த முடியும். நாங்கள் தற்போது நாட்டை ஒரளவு திறந்து விட்டுள்ளோம். எனினும் கட்டுப்பாடுகள் முழுமையாக எப்போது நீக்கப்படும் என தற்போது தெரிவிக்க முடியாது.

எதிர்காலத்தில் விமான நிலையமும் திறக்கப்படும். இதன் காரணமாக வைரஸ் தொடர்ந்து பரவுவதை தடுப்பதற்காக சிறந்த சுகாதார பழக்கங்களை,சமூக விலகல்கள், மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!