ஊரடங்கு சட்டத்தை மீறிய 2709 பேர் கைது!

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் இரண்டாயிரத்து 709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 946 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!