IOC நிறுவனம் பெற்றோலின் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் பெற்றோலின் விலையை உயர்த்தியுள்ளது.

இதன்படி, நாடு முழுவதிலும் இயங்கி வரும் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாவினால் உயர்த்தப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படும் என லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 142 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!