அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கடும் காற்றால் நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 281 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 492 வீடுகள் பகுதியளவும், 20 வீடுகள் முழுமையாகவும் சேமடைந்துள்ளன. மூவர் உயிரிழந்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!