பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!

????????????????????????????????????
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சில் முற்பகல் 10.30 அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார தரப்பினரும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வி சார் தரப்பினரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!