கருத்து வேறுபாடு இருந்தாலும் தொண்டமானின் மறைவு அதிர்ச்சி தருகிறது – திகாம்பரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘தொண்டமானின் திடீர் மறைவு செய்து அதிர்ச்சியைத் தருகின்றது. அவரது இழப்பானது மலையக மக்களுக்குப் பேரிழப்பாகும்.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் மறைவை அடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அவர் புதிய தலைமை வகித்து, அமைச்சுப் பதவிகள் பெற்று, மலையக மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்.

அரசியல் ரீதியாகக் தொண்டமானுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருந்ததில்லை. அதனால் அவரது மறைவு கவலை அளிக்கின்றது.

அரசியல் கட்சி பேதங்களை மறந்து தொண்டமானின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மலையக மக்களுக்குத் தலைமை கொடுத்த தலைவர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

மலையக மக்கள் கட்சி பேதமின்றி துயரில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்’. – என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!