ஆறுமுகனின் மகன் ஜீவனை களமிறக்க இதொகா முடிவு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் அவரது இடத்துக்கு நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் இளைஞரணி தலைவர் ஜீவன் தொண்டமானை களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரப் பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இம்முறை இ.தொ.கா போட்டியிடுகிற நிலையில், இ.தொ.காவின் இத்தீர்மானத்தை அக்கூட்டணியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!