1530 ஆக உயர்ந்த கொரோனா தொற்றாளர்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 61 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்றும், 26 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!