சரத்திடம் சிஐடி விசாரணை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1ம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று (29) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையான அவரிடம் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!