நேற்றும் 28 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 17 பேர் கடற்படையினர் என்றும், 11 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 754 பேர் குணமடைந்துள்ளனர் என்றும். 794 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!