டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளிகள்: 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் தூதரக அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றிய அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான் ஆகியோரே இவ்வாறு இன்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்படவுள்ளனர்.

குறித்த இருவரின் நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக உளவுபார்த்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!