நேற்று மட்டும் 66 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இறுதியாக பதிவாகிய 14 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 31 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், 19 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் நால்வர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் மேலும் நால்வர் மிஹிந்தலை தனிமைப்படுத்தல் நிலையத்திலும் இருந்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து வருகைதந்து தனிமைத்தல் நிலையத்தில் இருந்த 19 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். இருவர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, வைரஸ் தொற்றுக்குள்ளான 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 836 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!