மன்னாரில் 6 பேர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வர உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு தனது பிள்ளையுடன் வந்த நபர் ஒருவர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த நபர் எவ்வாறு மன்னாருக்கு வந்தார்கள் என அரச புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், படகு மூலம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தில் பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இராணுவத்தின் உதவியுடன் நேற்று புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் அழைத்து வர பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் படகின் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியனவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!