ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல்!

பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து. தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!