முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள, 98 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன.இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!