தபால் மூல வாக்களிப்பு – நாளை தீர்மானிக்கிறது ஆணைக்குழு!

தபால்மூல வாக்களிப்பு தினத்தை அறிவிப்பது குறித்து, நாளை முற்பகல் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் தடவையாக கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு தபால்மூல வாக்களிப்பு தினத்தை தீர்மானிக்கவுள்ளது.

அத்துடன், 13, 14 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் தொடர்பிலும், விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!