இலங்கையில் 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் — ஹர்ஷ சுட்டிக்காட்டினார்

இலங்கையில் கொரோனா நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று முன்னாள் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

தொழில் திணைக்களம், 2,700 தொழில் நிறுவனங்களில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கு அமைய, அந்நிறுவனங்களில் கொரோனாவுக்கு முன்னர் 3,76 388 பேர் பணிபுரிந்துள்ள நிலையில், மே மாதமளவில் 263,412 பேருக்கு பணிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது போயுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

‘தொழில் திணைக்களத்தின் இந்த அறிக்கை, அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாரியளவில் பொருளாதார பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில், 32,842 பேரில் மே 20,048 பேருக்கு தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டது.

ஹோட்டல் போன்ற துறைகளில் மே மாதத்துக்கு முன்னர் 24,324 பேர் பணிகளுக்கு அமர்த்தப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட நிலையில், மே மாதம் இதன் எண்ணிக்கை 19,730 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேப்போல் 7,483 பேர் கட்டடத் துறையில் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். தொழில் திணைக்களத்தின் அறிக்கைகளுக்கமைய 90 சதவீதமானோர் தொழிலின்றி, சம்பளமின்றி இருக்கின்றனர்.

இவர்கள் மாதாந்தம் செலுத்தப்பட வேண்டிய கடனட்டை, லீசிங், கடன் உள்ளிட்டவைகளை செலுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்’ – என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!