வவுனியாவில் வாள்வெட்டு – ஐந்து பேர் படுகாயம்!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் உள்நுழைந்த சிலர், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திய பின்னர், அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!