நேவி சம்பத்தை கைது செய்ய உத்தரவு!

நேவி சம்பத் எனப்படும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார.

கொழும்பில் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத்தை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ரவீந்திர விஜயகுணவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று விசாரணைக்கு வந்த போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன் இது குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!