“1000 ரூபாய்” குறித்து 25ம் திகதி பிரதமருடன் பேச்சு – மருதபாண்டி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (18) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் தொடர்பாக ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அன்றையதினம் 1000 ரூபாய் சம்பளம் தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!