கொரோனா தொற்று 2 ஆயிரத்தை நெருங்குகிறது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் 18 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் இருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையோர், இலண்டன், கட்டார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!