யஸ்மின் சூக்காவுக்கு எதிராக ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு!

அரச புலனாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் முறைப்பாட்டை செய்துள்ளார்.

தம்மீது அவதூறான குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் யஸ்மின் சூக்கா வெளியிட்ட குற்றச்சாட்டு, தமது கௌரத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியிருப்பதுடன், தமது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேஜர் ஜெனரல் சால்லே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு நிறுவனங்களும் நிதியுதவிகளை வழங்கிவருகின்றன.

எனினும் இந்த நிதிகளை பயன்படுத்தி யஸ்மி சூக்காவின் நிறுவனம் விடுதலைப்புலிகளின் அனுதாபிகளது நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்று சால்லே தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!