2011 உலகக் கிண்ண சர்ச்சை; சங்கா,மஹெல கடும் எதிர்ப்பு!

“2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டது”

இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன தமது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக மஹெல தனது டுவிட்டரில், “இது உண்மையெனில், இதில் சம்பந்தப்பட்டோரின் பெயர் மற்றும் ஆதாரங்களை காட்டுமாறும் மேலும் தேர்தல் நேரமென்பதால் சர்க்கஸ் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பது போல் உள்ளது” எனவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!