நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் நேற்று பூரணமாக குணமடைந்துள்ளனர். ஐ.டி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வௌியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!