ஷஹ்ரானை தப்பிக்க வைத்தவர் ரிஷாட்டின் தம்பியே – ஆணைக்குழுவில் சாட்சியம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில், பயங்கரவாதி ஷஹ்ரானின் கும்பல் தொடர்புபட்ட மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து, நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்து, ஷஹ்ரான் ஹஷிம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அவ்வாறு படகில் இந்தியாவுக்கு செல்ல அவருக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் உதவியதாகவும் உளவுப் பிரிவொன்றின் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அந்த முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர் மேர்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

அவர் சாட்சியமளிக்கையில்,

‘நான் பணியாற்றிய உளவுத்துறை, முன்னாள் தேசிய புலனாய்வு சேவையின் (என்.ஐ.எஸ்) தலைவர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலி் மா அதிபர் சிசிர மெண்டிஸ், முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன ஆகியோருக்கு 9 சந்தர்ப்பங்களில் ஷஹ்ரானின் தீவிரவாத உரைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஷஹ்ரானின் உரைகள், இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கருத்துக்களை ஒத்தவையாக இருப்பதால், இது தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உளவுத் துறை பிரதானிகளை நான் கேட்டுக்கொண்டேன்.

தேசிய புலனாய்வு சேவைக்கு தலைமை தாங்க வேண்டிய நபர் இந்த விஷயத்தில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். எனினும் சிசிர மெண்டிஸ் அத்தகைய பண்புகளை கொண்டிருக்கவில்லை.

2017 மார்ச் மாதம் தேசிய தெளஹீத் ஜமாஅத் தரப்புக்கும் மற்றொரு தரப்பினருக்கு இடையே காத்தான்குடியில் மோதலொன்று ஏற்பட்டது. அந்த மோதலைத் தொடர்ந்து ஷஹ்ரான் கத்தான்குடி பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். அந்த சம்பவத்தை மையப்படுத்தி ஷஹ்ரான் உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதனால், ஷஹ்ரான் அவ்வப்போது மாவனெல்லை மற்றும் குருனாகல் பகுதிகளில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

பின்னர், 2018ம் ஆண்டு ஷஹ்ரான் மன்னார் வந்து படகு மூலம் இந்தியா சென்றிருந்தார். ஷஹ்ரான் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து தனக்கு சொந்தமான யூடியூப் சேனல் மூலம் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஷஹ்ரான் இந்தியாவில் காஷ்மீர்வரை சென்றதாக அப்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.’ – என்றார்.

அப்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சாட்சியாளரிடம் இந்தியா செல்ல ஷஹ்ரானுக்கு யார் உதவி செய்தார்கள் என வினவினர். அதற்கு பதிலளித்த அவர்,

ரிப்கான் பதியுதீனே ஷஹ்ரானுக்கு படகு மூலம் இந்தியா செல்ல உதவியதாக கூறினார். அத்துடன் அக்காலப்பகுதியில் ரிப்கான் பதியுதீன் சட்டவிரோதப் பொருள்களைக் இந்தியவில் இருந்து நாட்டுக்குள் கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். அவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் எனவும் சாட்சியாளர் வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த ஷஹ்ரான் போன்ற ஒருவருக்கு சக்திவாய்ந்த அமைச்சரின் சகோதரர் அளித்த ஆதரவைப் பற்றி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிவித்தீர்களா என ஆணைக் குழு உறுப்பினர்கள் சாட்சியாளரிடம் மீளவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக கூறினார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற உளவுத்துறை கூட்டத்திலும் நான் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தேன். 2019 மார்ச் 19 அன்று, இந்த விவகாரம் தே.பு.சே தலைவரின் கவனத்திற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மூலம் கொண்டு வரப்பட்டது, என்று சாட்சியாளர் விளக்கினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடியதா என்று ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மீளவும் சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு,

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சபைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் 2019 மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 2 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெற்ற உளவுத்துறை மறுஆய்வுக் கூட்டங்களில் இந்த தகவலை தான் முன்வைத்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.

இந்த தகவல்கள் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னிலையில் தன்னால் முன்வைக்கப்பட்ட போதும், அவர்கள் அது தொடர்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் சாட்சியாளர் கூறினார். அத்துடன் பயங்கரவாதி ஷஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாஅத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆதரித்ததாகவும் அது தொடர்பிலும் தான் தேசிய புலனாய்வு சேவை பிரதானிக்கு 2017ம் ஆண்டே அறிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இதனைவிட, சாட்சியாளர் தனது சாட்சியத்தின் போது, 2019 ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர், ஏப்ரல் 11ம் திகதி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் உளவுத் தகவல்கள் குறித்தும் சாட்சியமளித்தார்.

அது குறித்த ஆவணங்களை பரீட்சித்து சாட்சியமளித்த அவர், அது தெளிவான உளவுத் தகவல் எனவும், எனினும் அந்த தகவல்கள் அடங்கிய கோவையின் ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வசனங்கள், முழு தகவலையும் முற்றாக மழுங்கடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில், பயங்கரவாதி ஷஹ்ரானின் கும்பல் தொடர்புபட்ட மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து, நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்து, ஷஹ்ரான் ஹஷிம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அவ்வாறு படகில் இந்தியாவுக்கு செல்ல அவருக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் உதவியதாகவும் உளவுப் பிரிவொன்றின் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அந்த முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர் மேர்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

அவர் சாட்சியமளிக்கையில்,

‘நான் பணியாற்றிய உளவுத்துறை, முன்னாள் தேசிய புலனாய்வு சேவையின் (என்.ஐ.எஸ்) தலைவர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலி் மா அதிபர் சிசிர மெண்டிஸ், முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன ஆகியோருக்கு 9 சந்தர்ப்பங்களில் ஷஹ்ரானின் தீவிரவாத உரைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஷஹ்ரானின் உரைகள், இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கருத்துக்களை ஒத்தவையாக இருப்பதால், இது தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உளவுத் துறை பிரதானிகளை நான் கேட்டுக்கொண்டேன்.

தேசிய புலனாய்வு சேவைக்கு தலைமை தாங்க வேண்டிய நபர் இந்த விஷயத்தில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். எனினும் சிசிர மெண்டிஸ் அத்தகைய பண்புகளை கொண்டிருக்கவில்லை.

2017 மார்ச் மாதம் தேசிய தெளஹீத் ஜமாஅத் தரப்புக்கும் மற்றொரு தரப்பினருக்கு இடையே காத்தான்குடியில் மோதலொன்று ஏற்பட்டது. அந்த மோதலைத் தொடர்ந்து ஷஹ்ரான் கத்தான்குடி பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். அந்த சம்பவத்தை மையப்படுத்தி ஷஹ்ரான் உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதனால், ஷஹ்ரான் அவ்வப்போது மாவனெல்லை மற்றும் குருனாகல் பகுதிகளில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

பின்னர், 2018ம் ஆண்டு ஷஹ்ரான் மன்னார் வந்து படகு மூலம் இந்தியா சென்றிருந்தார். ஷஹ்ரான் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து தனக்கு சொந்தமான யூடியூப் சேனல் மூலம் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஷஹ்ரான் இந்தியாவில் காஷ்மீர்வரை சென்றதாக அப்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.’ – என்றார்.

அப்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சாட்சியாளரிடம் இந்தியா செல்ல ஷஹ்ரானுக்கு யார் உதவி செய்தார்கள் என வினவினர். அதற்கு பதிலளித்த அவர்,

ரிப்கான் பதியுதீனே ஷஹ்ரானுக்கு படகு மூலம் இந்தியா செல்ல உதவியதாக கூறினார். அத்துடன் அக்காலப்பகுதியில் ரிப்கான் பதியுதீன் சட்டவிரோதப் பொருள்களைக் இந்தியவில் இருந்து நாட்டுக்குள் கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். அவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் எனவும் சாட்சியாளர் வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த ஷஹ்ரான் போன்ற ஒருவருக்கு சக்திவாய்ந்த அமைச்சரின் சகோதரர் அளித்த ஆதரவைப் பற்றி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிவித்தீர்களா என ஆணைக் குழு உறுப்பினர்கள் சாட்சியாளரிடம் மீளவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக கூறினார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற உளவுத்துறை கூட்டத்திலும் நான் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தேன். 2019 மார்ச் 19 அன்று, இந்த விவகாரம் தே.பு.சே தலைவரின் கவனத்திற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மூலம் கொண்டு வரப்பட்டது, என்று சாட்சியாளர் விளக்கினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடியதா என்று ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மீளவும் சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு,

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சபைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் 2019 மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 2 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெற்ற உளவுத்துறை மறுஆய்வுக் கூட்டங்களில் இந்த தகவலை தான் முன்வைத்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.

இந்த தகவல்கள் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்னிலையில் தன்னால் முன்வைக்கப்பட்ட போதும், அவர்கள் அது தொடர்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் சாட்சியாளர் கூறினார். அத்துடன் பயங்கரவாதி ஷஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாஅத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆதரித்ததாகவும் அது தொடர்பிலும் தான் தேசிய புலனாய்வு சேவை பிரதானிக்கு 2017ம் ஆண்டே அறிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இதனைவிட, சாட்சியாளர் தனது சாட்சியத்தின் போது, 2019 ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர், ஏப்ரல் 11ம் திகதி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் உளவுத் தகவல்கள் குறித்தும் சாட்சியமளித்தார்.

அது குறித்த ஆவணங்களை பரீட்சித்து சாட்சியமளித்த அவர், அது தெளிவான உளவுத் தகவல் எனவும், எனினும் அந்த தகவல்கள் அடங்கிய கோவையின் ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வசனங்கள், முழு தகவலையும் முற்றாக மழுங்கடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.