நேற்றும் 9 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2010 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று புதிதாக 9 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்தே, இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களில் ஆறு பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஏனைய மூவரும், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!