அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை, இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று, ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!