முற்றாக நீக்கப்பட்டது ஊரடங்கு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம், இன்று முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி, நாடு முழுவதும், ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம், கடந்த 13 ஆம் திகதியில் இருந்து, நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இன்று தொடக்கம் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!