ரொரன்றோவில் கருப்பினப்பெண்ணை இன ரீதியாக விமர்சித்த வெள்ளையினப்பெண்!

ரொரன்றோவில் வெள்ளையினப் பெண்ணொருவர் தன் முன்னால் உட்கார்ந்த கருப்பினப்பெண் ஒருவரை இன ரீதியாக விமர்சித்துள்ளார். மருத்துவமனை ஊழியரான Dionne Samantha Callaghan, பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, அவருக்கு எதிரே தன் மகனுடன் அமர்ந்திருந்த வெள்ளையினப்பெண் ஒருவர், Samantha இன ரீதியாக விமர்சித்தவண்ணம் இருந்துள்ளார். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருந்த Samantha அதைக் கண்டுகொள்ளாததுபோல் இருக்க, அந்த பெண், தன் மகன் கையிலிருந்த மார்க்கர் பேனாவை வாங்கி கருப்பினத்தவரை இன ரீதியாக விமர்சிக்கும் வார்த்தை ஒன்றை அவரது கண்ணுக்கு முன்பாக ரயிலின் ஜன்னல் அருகே எழுதிவிட்டு, அவரை நோக்கி விரலைச் சுட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சாட்சியமளிக்க முன்வர, தகவல் அறிந்ததும், அந்த ரயில் சேவையிலிருந்து அகற்றப்பட்டு ஷெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பெட்டியளித்த Samantha, தனது அஸ்திவாரமே ஆடிப்போனதுபோல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பொலிசார் இன ரீதியான தாக்குதல் நடத்திய அந்த பெண்ணை கைது தேடிக்கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

அவர் மீது தற்போதைக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அவர் மீது இனவெறுப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவர் பெயரையும் பொலிசார் வெளியிடவில்லை. தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்திவருகின்ற நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட இருவர் அளித்த சாட்சியம் மிக விரைவாக அவர்கள் குற்றவாளியை பிடிக்க உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!