கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் நிலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் நிலை உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன, தேர்தல் நடைபெறவுள்ளது, இவ்வாறான சூழலில் இன்றும் சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டி வர்த்தமானியில் வெளியிடப்படாமை பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சுகாதார பரிந்துரைகளை உள்ளடக்கிய வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாமையினால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!