நேற்று 12 பேருக்கு கொரோனா!

இலங்கையில் நேற்று 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 2,066 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் ஐந்து பேர் கட்டாரில் இருந்தும், 5 பேர் குவைத்தில் இருந்தும், இருவர் இந்தியாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!