வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்குள் 5 சோதனைச் சாவடிகள்! – சிறிதரன் விசனம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் முழுவதும் அரசு இராணுவத்தை குவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று கல்லாறு மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ சாதாரணமாக வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்குள் ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டியே வரவேண்டியுள்ளது. இவ்வாறு எமது மாவட்டத்தில் பல இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

இராணுவ முற்றுகைக்குள் வைத்துக் தமிழர்களை அடக்கி ஒடுக்க முயல்கிறார்கள். நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது. நாற்பது ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்த எமது ஜனாதிபதி நாட்டின் அனைத்து வகையான விடயங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்து நாட்டை ஆளலாம் எனும் எண்ணப் போக்கில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!