கோணேச்சரம் அல்ல, கோகண்ண விகாரையாம்!

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரையே என்று கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்த 2000 இடங்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும். இதை கூடிய விரைவில் செய்து முடிக்க வேண்டும்.

குறிப்பாக பொலனறுவையில் உள்ள சிவன் கோயில் எம்முடையது அல்லவென்றாலும் அதை நாம் பாதுகாக்கின்றோம். கோணேச்சரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம். ஆனால் அங்குள்ள தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!