சம்பிக்க – ஏஎஸ்பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவ உட்பட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் போலி சாட்சிகளை தயாரித்தமை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு திரையிட்டு போலி தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்பட்டு இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!