பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு!

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் ஒரு சிறிய பயங்கரவா பிரிவினரால் செயற்படுத்தப்பட்டதாகும். இந்த விடயத்தை அனைவரும் அறிவோம். இதற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது சரிதானா?

சஜித் பிரேமதாசவுக்கு முதுகெலும்பு இருக்கின்றது. தவறு என்றால் அதனை அஞ்சாமல் தவறுதான் என்று சுட்டிக்காட்ட கூடிய தைரியம் எனக்கு இருக்கின்றது.

என்னைப் பற்றி பொய்யான பல விடயங்கள் கூறப்படுகின்றன. எனக்கு பயமில்லை. உண்மையான பௌத்த ஆகமத்தை கடைப்பிடித்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பதை இவ்விடத்தில் காட்போட் பௌத்தர்களுக்கு (பேரளவு பௌத்தர்கள்) கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!