ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச ?

இம்முறை தேர்தல் வெற்றியின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளுமாறு அனாதரவாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெதிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை பிடிக்க நினைப்பவர்களுக்கு பதிலாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிக்கு மக்கள் உங்களது பெறுமதியான வாக்குகளை வழங்க வேண்டும்.

இம்முறை பொதுத் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரியும்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திய பின்னர், ஜனாதிபதியின் கொள்கைகள் ஊடாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நின்று போன நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!