கோவிட்-19: தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தோர் அடங்கிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 467 பேருடன் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்துவந்த 59 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை புதிதாக 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளனர்என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!