முக்கிய அறிவிப்பு தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்-தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சில வேட்பாளர்கள் தமது பிரசாரங்களுக்காக காணொளிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் கண்காணிப்பு அமைப்புகளினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறுவர்களின் ஆளுமை வளர்ச்சி, மனநிலை, அடையாளம் மற்றும் அவர்களின் எதிர்காலம் என்பன மோசமாகப் பாதிக்கப்படலாமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!