தைரியம் இல்லாமல் தேர்தலை ஒத்திப்போட கோருகின்றனர் – கடுப்பானார் சுசில்

போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும். கொரோனா பரவலை காரணம் காட்டி, ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை பிற்போடுமாறு எதிர்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலை பிற்போடுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று சமூக தொற்றாக பரவலடையவில்லை என்பதை சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

தேர்தலை தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்தரைக்க வேண்டும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!