பஸ்களின் ஆசன எண்ணிக்கையை மீறினால் நடவடிக்கை!

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டடில் அதிகரித்துள்ளதன் காரணமாக பேருந்து உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் மிகவும் முக்கியமானதாக, ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

எனினும் இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பேருந்துகள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆகவே இவ்வாறு செயற்படும் பேருந்து உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!