யானை தாக்கி காயமடைந்த விரிவுரையாளர் சாவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் நேற்று (19) இரவு காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளர் விடுதி வளாகத்தில் நடமாடிய போது இவரை யானை தாக்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!