அனைத்துக் கடற்படையினரும் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படையினரும், சிகிச்சைக்குப் பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் இருந்து வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 906 கடற்படை வீரர்களும் தற்பொழுது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். சிகிச்சையின் பின் வெளியேறும் கடற்படை வீரர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 2 வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!