யானை தாக்கிய விரிவுரையாளருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!

கிளிநொச்சியில் யானை தாக்கி படுகாயமடைந்த தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் உயிரிழந்து விட்டார் என்று வெளியான செய்திகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மறுத்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விடுதியில் தங்கியிருந்த, தொழில்நுட்ப பீட விரிவுரையாளரான 32 வயதுடைய காயத்ரி தில்ருக்ஷி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மற்றொரு பெண் விரிவுரையாளருடன் விகாரைக்குச் சென்று திரும்பிய போது, யானை தாக்கி படுகாயமடைந்தார். யானை தூக்கி வீசியதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!