கொரோனா தடுப்பு மையத்தில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்றுவருபவர்கள் குடும்பத்தினரை பிரிந்து இருப்பதால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் ஏற்படும் மன உளைச்சலை போக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளே நொண்டி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி தங்கள் மன அழுத்தத்தை போக்கிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் தங்கள் மன அழுத்தத்தை போக்கு விதமாக ‘பிளாஷ் மாப்’ எனப்படும் திடீர் ஆடல் பாடலுடன் நடனத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவமனை கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குழுவாக இணைந்து நேற்று மருத்துவமனை வளாகத்தில் திரண்டு ‘பிளாஸ் மாப்’ எனப்படும் எதிர்பாராத ஆடல் பாடல் நடனத்தில் ஈடுபட்டனர்.

இந்த நடனத்தில் ஈடுபட்ட நோயாளிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் உச்சாக நடனத்தை வெளிப்படுத்தினர். இந்த நடனத்தில் மருத்துவ ஊழியர்களும் பங்கேற்று தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இவ்வாறு நடனம் மற்றும் ஆடல் பாடலுடன் குத்தாட்டம் போட்டு தங்கள் மன அழுத்தத்தை போக்கினர். இந்த நடன நிகழ்ச்சி குடும்பத்தை பிரிந்து இருக்கும்தங்களுக்கு புத்துணர்ச்சியை தருவதாக உள்ளது என வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!