3 அரசியல்வாதிகளால் கொரோனா பரவும் ஆபத்து!

மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட நான்கு அரசியல்வாதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இந்த மரணச்சடங்கில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 4 பேரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனினும் அவர்களில் ஒருவர் மட்டுமே தனிமைப்படுதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் பொது சுகாதார பரிசோதாகர்களின் சங்கத்தலைவர் உப்புல் ரோகண, ஏனைய 3 பேரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த 3 அரசியல்வாதிகளினால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!